இக்கோயில் 'தருமர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. பாரதப் போரில் தருமர் தமது குருவான துரோணாசாரியாரிடம், அவரது மகன் அசுவத்தாமன் இறந்து விட்டதாகப் பொய் சொல்ல, அது துரோணருக்கு முடிவாகவும் அமைந்தது. தான் கூறிய பொய்யே அவரது மரணத்திற்குக் காரணம் என்று வருந்திய தர்மபுத்திரர் இத்தலத்திற்கு வந்து பகவானுக்கு ஆலயம் எழுப்பி, திருச்சிற்றாற்றில் ஸ்நானம் செய்து பூஜை செய்தார். எனவே இப்பெயர் பெற்றது.
ஒருசமயம் தேவர்கள் இத்தலத்தில் கூடி தவம் செய்தபோது, மகாவிஷ்ணு காட்சி தந்து ஒரு தந்தையைப் போல ஆசி கூறியதால் மூலவருக்கு 'இமையவர் அப்பன்' என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர் இமையவரப்பன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இந்த மூர்த்தியை பஞ்ச பாண்டவர்களுள் மூத்தவரான தருமபுத்திரர் ஜீர்ணோத்தாரணம் செய்ததால் 'தருமர் பிரதிஷ்டை' என்று அழைக்கப்படுகிறது. தாயாருக்கு செங்கமலவல்லி என்பது திருநாமம். ருத்ரனுக்கு (சிவன்) பகவான் பிரத்யக்ஷம்.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|